×

அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும் வள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் பேசக்கூடாது: ஆளுநர் ரவிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை: வள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து அரசியல் சட்டப்படி நடக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: தனக்கு தெரியாத பலவற்றை குறித்து, எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஆளுநரின் வாடிக்கை. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்ற பாரதியின் பாடல் வரிகளில் உள்ள தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் கடந்த ஆண்டு சிக்கித் தவித்து, எட்டுத்திக்கும் உள்ள தமிழர்களுடைய எதிர்ப்புகளுக்கு தலைபணிந்து, ‘இது தமிழ்நாடு தான்’ என்று ஒப்புக்கொண்ட ஆளுநர், இந்த ஆண்டு வள்ளுவரை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு வந்த பணிகளை செய்யாமல், கையில் கிடைக்கும் அனைத்துக்கும் காவிச் சாயம் பூசிக் கொண்டு இருக்கும் ஆளுநர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் பக்கம் இன்று திரும்பியிருக்கிறார். வேதநெறிக்கு எதிராக குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், ஆளுநராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப் போல உருட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் காவிக் கட்சியில் சேர்ந்து, அரசியல் பேசலாம். அதற்கு காலதாமதமாகும் என்றால் அய்யன் திருவள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும். சமத்துவப் பொங்கல், திருவள்ளுவர் நாள்.

The post அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும் வள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் பேசக்கூடாது: ஆளுநர் ரவிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,Governor ,Ravi ,Chennai ,Governor RN ,Tamil Nadu ,S. Raghupathi ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...